எல்லா உணர்ச்சிகளைக் காட்டிலும் கொடியது பயம்.
- பென்னட்
சோதனைகள்தான் ஒரு மனிதனை அவனுக்கே அறிமுகப்படுத்துகின்றன.
- யாரோ
வாழ்க்கையின் குறிக்கோள் உழைப்பும், அனுபவமும், மகிழ்ச்சியும் ஆகும்.
- ஹென்றி ஃபோர்டு
ஞானம் இல்லாமல் நீதி செலுத்துவது இயலாது.
- புரூட்
"வாழ்க வளமுடன்' என்று வாழ்த்துவது மிக உயர்ந்த பலனை அளிக்கும்.
- வேதாத்திரி மகரிஷி
சந்தர்ப்பம் வரும் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். தங்களுக்குத் தேவையான சந்தர்ப்பங்களைத் தேடிப் பெறுபவர்கள்தான் வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள்.
- பெர்னார்ட் ஷா
நல்ல செயல்களுக்கு உரிய பலன்கள் வந்தே தீரும்! சிறிது தாமதமாகலாம்...ஆனால் அது நிச்சயம் வந்தே தீரும்!
- க்ரீவ்ஸ்
தவறான வழியில் எவ்வளவு தூரம் போயிருக்கிறாய் என்பது பொருட்டல்ல!.....திரும்பி விடு!
- டுர் கிஷ்
எந்தக் காரியத்திலும் வெற்றியின் முதல் படி என்பது அந்தக் காரியத்தில் ஆர்வம் கொண்டிருப்பதுதான்!
- வில்லியம் ஆஸ்லர்
ஒருவன் தன்னைப் பற்றி அதிக உயர்வாக எண்ணுவதும், அதிகத் தாழ்வாக எண்ணுவதும் இரண்டுமே தவறுதான்!
- கதே