பொன்மொழிகள்!

எல்லா உணர்ச்சிகளைக் காட்டிலும் கொடியது பயம். 
பொன்மொழிகள்!

எல்லா உணர்ச்சிகளைக் காட்டிலும் கொடியது பயம். 
- பென்னட்

சோதனைகள்தான் ஒரு மனிதனை அவனுக்கே அறிமுகப்படுத்துகின்றன. 
- யாரோ

வாழ்க்கையின் குறிக்கோள் உழைப்பும், அனுபவமும், மகிழ்ச்சியும் ஆகும். 
- ஹென்றி ஃபோர்டு

ஞானம் இல்லாமல் நீதி செலுத்துவது இயலாது. 
- புரூட்

"வாழ்க வளமுடன்' என்று வாழ்த்துவது மிக உயர்ந்த பலனை அளிக்கும். 
- வேதாத்திரி மகரிஷி

சந்தர்ப்பம் வரும் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். தங்களுக்குத் தேவையான சந்தர்ப்பங்களைத் தேடிப் பெறுபவர்கள்தான் வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள். 
- பெர்னார்ட் ஷா

நல்ல செயல்களுக்கு உரிய பலன்கள் வந்தே தீரும்! சிறிது தாமதமாகலாம்...ஆனால் அது நிச்சயம் வந்தே தீரும்! 
- க்ரீவ்ஸ்

தவறான வழியில் எவ்வளவு தூரம் போயிருக்கிறாய் என்பது பொருட்டல்ல!.....திரும்பி விடு! 
- டுர் கிஷ்

எந்தக் காரியத்திலும் வெற்றியின் முதல் படி என்பது அந்தக் காரியத்தில் ஆர்வம் கொண்டிருப்பதுதான்! 
- வில்லியம் ஆஸ்லர்

ஒருவன் தன்னைப் பற்றி அதிக உயர்வாக எண்ணுவதும், அதிகத் தாழ்வாக எண்ணுவதும் இரண்டுமே தவறுதான்! 
- கதே
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com