மிகவும் எளிமையான வாழ்க்கை நடத்தியவர் சாக்ரடீஸ். ஆனால் கடைகளுக்குச் அடிக்கடி செல்வார். அங்கு விற்பனைக்கு உள்ள பொருள்களையெல்லாம் பார்ப்பதில் அவருக்கு விருப்பம் அதிகம். ஆனால் எதையும் வாங்கமாட்டார்.
""நீங்கள்தான் எதையும் வாங்குவதில்லையே...எதற்காக இதையெல்லாம் பார்க்கிறீர்கள்?'' என்று ஒரு நண்பர் கேட்டார்
""எனக்குத் தேவையில்லாத பொருட்கள் எவ்வளவு இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளத்தான்!'' என்றார் சாக்ரடீஸ்!