திரிகடுகம் நல்லாதனார்

நீதி நூல்வழி முறைசெய்யும் திறமில்லாதவன் வென்ற அவைத் தலைமையும்; உள்ளத்தின்கண் அவாவுடையான் மேற்கொண்ட தவமும்;
திரிகடுகம் நல்லாதனார்

முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்
நிறையிலான் கொண்ட தவமும் - நிறையொழுக்கம்
தோற்றாதான் பெற்ற வனப்பு மிவைமூன்றும்
தூற்றின்கட் டூவிய வித்து. (பாடல்-80)

நீதி நூல்வழி முறைசெய்யும் திறமில்லாதவன் வென்ற அவைத் தலைமையும்; உள்ளத்தின்கண் அவாவுடையான் மேற்கொண்ட தவமும்; நிறைந்த நல்லொழுக்கத்தை அறிந்து நடவாதவன் பெற்ற அழகும் இவை மூன்றும் புதலிடத்து (விளையாத நிலத்தில்) விதைத்த விதையையொக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com