முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்
நிறையிலான் கொண்ட தவமும் - நிறையொழுக்கம்
தோற்றாதான் பெற்ற வனப்பு மிவைமூன்றும்
தூற்றின்கட் டூவிய வித்து. (பாடல்-80)
நீதி நூல்வழி முறைசெய்யும் திறமில்லாதவன் வென்ற அவைத் தலைமையும்; உள்ளத்தின்கண் அவாவுடையான் மேற்கொண்ட தவமும்; நிறைந்த நல்லொழுக்கத்தை அறிந்து நடவாதவன் பெற்ற அழகும் இவை மூன்றும் புதலிடத்து (விளையாத நிலத்தில்) விதைத்த விதையையொக்கும்.