தோள்வழங்கி வாழுந் துறைபோற் கணிகையும்
நாள்கழகம் பார்க்கு நயமிலாச் சூதனும்
வாசிகொண் டொண்பொருள் செய்வானு - மிம்மூவர்
ஆசைக் கடலுளாழ் வார். (பாடல்-81)
தன்கட் செல்வார்க்கெல்லாம் பொதுவான நீர்த்துறைபோல பொருள் கொடுப்பார் யாவர்க்கும் தோள்களை விற்று வாழும் வேசையும்; வாழும் நாடோறும் சூதாடுமிடத்தையே நோக்கிச் செல்லும் நன்மை பயத்தல் இல்லாத சூதினையாடுவோனும்; மிகு வட்டி கொண்டு ஒள்ளிய பொருளீட்டுவானும் ஆகிய இந்த மூவரும் ஆசையாகிய கடலினுள்ளே மூழ்கி அழுந்துவர்.