வள்ளன்மை பூண்டான்கட் செல்வமு முள்ளத்
துணர்வுடையா னோதிய நூலும் - புணர்வின்கண்
தக்க தறியுந் தலைமகனு யிம்மூவர்
பொத்தின்றிக் காழ்த்த மரம். (பாடல்-75)
வரையாது கொடுத்தலை கடனாகக் கொண்டவனிடத்துள்ள பொருளும்; மனத்தினாற் சிந்தித்தறியும் அறிவுடையவன் கற்ற நூலும்; பிறர் தன்னைச் சார்ந்தவிடத்து அவர்க்குச் செய்யத் தகுந்தவற்றை அறியவல்ல தலைவனும் ஆகிய இம்மூவரும், பொந்து இல்லாமல் வயிரம் பற்றிய (பாய்ந்த) மரம் போல் உறுதியுடையவராவர்.