நல்லாதனார்

வரையாது கொடுத்தலை கடனாகக் கொண்டவனிடத்துள்ள பொருளும்;
நல்லாதனார்

வள்ளன்மை பூண்டான்கட் செல்வமு முள்ளத்
துணர்வுடையா னோதிய நூலும் - புணர்வின்கண்
தக்க தறியுந் தலைமகனு யிம்மூவர்
பொத்தின்றிக் காழ்த்த மரம். (பாடல்-75)

வரையாது கொடுத்தலை கடனாகக் கொண்டவனிடத்துள்ள பொருளும்; மனத்தினாற் சிந்தித்தறியும் அறிவுடையவன் கற்ற நூலும்; பிறர் தன்னைச் சார்ந்தவிடத்து அவர்க்குச் செய்யத் தகுந்தவற்றை அறியவல்ல தலைவனும் ஆகிய இம்மூவரும், பொந்து இல்லாமல் வயிரம் பற்றிய (பாய்ந்த) மரம் போல் உறுதியுடையவராவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com