மாரிநாள் வந்தவிருந்து மனம் பிறிதாய்க்
காரியத்திற் குன்றாக் கணிகையும் - வீரியத்து
மாற்ற மறுத்துரைக்குஞ் சேவகனு மிம்மூவர்
போற்றற் கரியார் புரிந்து. (பாடல்-76)
மழைக் காலத்தில் வந்த விருந்தினரும்; உளம் மாறுபட்டு, தனது கருமத்தில் நின்றும் குன்றாதொழுகும் வேசை மகளும்; போரிடத்து தலைவனது சொல்லை மறுத்துக் கூறும் வீரனும் ஆகிய இந்த மூவரும் விரும்பி பேணுதற்கு அரியவராவர்.