திரிகடுகம் நல்லாதனார்

மழைக் காலத்தில் வந்த விருந்தினரும்; உளம் மாறுபட்டு, தனது கருமத்தில் நின்றும் குன்றாதொழுகும் வேசை மகளும்

மாரிநாள் வந்தவிருந்து மனம் பிறிதாய்க்
காரியத்திற் குன்றாக் கணிகையும் - வீரியத்து
மாற்ற மறுத்துரைக்குஞ் சேவகனு மிம்மூவர்
போற்றற் கரியார் புரிந்து. (பாடல்-76)

மழைக் காலத்தில் வந்த விருந்தினரும்; உளம் மாறுபட்டு, தனது கருமத்தில் நின்றும் குன்றாதொழுகும் வேசை மகளும்; போரிடத்து தலைவனது சொல்லை மறுத்துக் கூறும் வீரனும் ஆகிய இந்த மூவரும் விரும்பி பேணுதற்கு அரியவராவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com