கயவரைக் கையிகந்து வாழ்த னயவரை
நள்ளிருளுங் கைவிடா நட்டொழுகல் - தெள்ளி
வடுவான வாராற் காத்தலிம் மூன்றும்
குடிமா சிலார்க்கே யுள. (பாடல்-77)
கீழ்மக்களை விட்டு நீங்கி ஒழுகுதலும்; நல்லவரை பாதியிரவிலும் கைவிடாமல் அவருடன் நட்புப் பூண்டு ஒழுகுதலும்; குற்றம் பயக்கும் செயல்கள் தங்கண் உண்டாகாமல் தடுத்தலும் ஆகிய இந்த மூன்றும் குடிப்பிறப்பில் குற்றம் இல்லாவர்க்கே உண்டாகும்.