திரிகடுகம் நல்லாதனார்

கயவரைக் கையிகந்து வாழ்த னயவரைநள்ளிருளுங் கைவிடா நட்டொழுகல் - தெள்ளிவடுவான வாராற் காத்தலிம் மூன்றும்குடிமா சிலார்க்கே யுள. (பாடல்-77)
திரிகடுகம் நல்லாதனார்

கயவரைக் கையிகந்து வாழ்த னயவரை
நள்ளிருளுங் கைவிடா நட்டொழுகல் - தெள்ளி
வடுவான வாராற் காத்தலிம் மூன்றும்
குடிமா சிலார்க்கே யுள. (பாடல்-77)

கீழ்மக்களை விட்டு நீங்கி ஒழுகுதலும்; நல்லவரை பாதியிரவிலும் கைவிடாமல் அவருடன் நட்புப் பூண்டு ஒழுகுதலும்; குற்றம் பயக்கும் செயல்கள் தங்கண் உண்டாகாமல் தடுத்தலும் ஆகிய இந்த மூன்றும் குடிப்பிறப்பில் குற்றம் இல்லாவர்க்கே உண்டாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com