அற்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல்
கற்புப் பெரும்புணை காதலிற் கைவிடுதல்
நட்பி னயநீர்மை நீங்க லிவை மூன்றும்
குற்றந் தரூஉம் பகை. (பாடல்-86)
உயிர்கள் மாட்டுத் தனக்குள்ள அன்பாகிய பெரிய தளை கட்டுந் தளர்ந்து நீங்குதலும்; கல்வியாகிய பெரிய தெப்பத்தை பொருள் மீது உண்டான ஆசையால் கைவிடுதலும்; நட்புப் பூண்டொழுகுங்கால் அதற்குரிய நல்ல தன்மையினின்றும் நீங்குதலும் ஆகிய இவை மூன்றும் தனக்குக் குற்றத்தைத் தரும் பகைகள்.