இருளாய்க் கழியு முலகமும் யாதுந்
தெரியா துரைக்கும் வெகுள்வும் - பொருளல்ல
காதற் படுக்கும் விழைவு மிவைமூன்றும்
பேதைமை வாழு முயிர்க்கு. (பாடல்-93)
எப்பொழுதும் இருள் போன்று கழியும் உலக வாழ்க்கையும்; ஒன்றும் தெரியாது (நன்மை-தீமைகள்), உணராது சொல்லுகின்ற சினமும்; நற்பொருள்கள் அல்லாதவற்றை விரும்பும் விருப்பமும் இவை மூன்றும் இவ்வுலகில் வாழ்ந்து வரும் மக்கள் உயிர்க்கு அறியாமையை விளைவிப்பனவாம்.