தமிழ்மணி
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
ஒளி பொருந்திய கண்ணை உடையாய்! வெள்ளம் வருகின்ற காலத்தில் ஈரம் பொருந்திய மணலைப் போல, வஞ்சனையான எண்ணம் உடையாரை, மனத்தை முகங் காட்டுதலின் அதனைக்கொண்டே அறிந்து கொள்ளலாம்.
வெள்ளம் வருங்காலை ஈரம்பட் டஃதேபோல்
கள்ள முடையாரைக் கண்டே அறியலாம்
ஒள்ளமர் கண்ணாய்! ஒளிப்பினும் உள்ளம்
படர்ந்ததே கூறும், முகம். (பாடல்-41)
ஒளி பொருந்திய கண்ணை உடையாய்! வெள்ளம் வருகின்ற காலத்தில் ஈரம் பொருந்திய மணலைப் போல, வஞ்சனையான எண்ணம் உடையாரை, மனத்தை முகங் காட்டுதலின் அதனைக்கொண்டே அறிந்து கொள்ளலாம். தங்கருத்தை வெளித்தோன்றாமல் ஒருவர் மறைப்பினும், முகமானது அவர் மனத்தில் உள்ளதையே வெளிப்படுக்குமாகலான். (க}து.)மறைப்பினும் உள்ளத்தில் உள்ளவாறே முகம்காட்டு மென்பதாம். "உள்ளம் படர்ந்ததே கூறும்முகம்' என்பது பழமொழி.