பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மரங்கள் மிக்குச் செறிந்த சோலைகள் சூழ்ந்த மலைநாட்டிற்கு உரியவனே! குரங்கினங்களுள் நல்ல முகத்தை உடையவை இல்லை. (அதுபோல) பெருகி வழிவழியாக வந்த, தீய குணமுடையா ரெல்லாருள்ளும், பெருக ஆராய்ந்து,

நிரந்து வழிவந்த நீசருள் எல்லாம்
பரந்தொருவர் நாடுங்கால் பண்புடையார் தோன்றார்
மரம்பயில் சோலை மலைநாட! என்றும்
குரங்கினுள் நன்முகத்த இல். (பாடல்-58)

மரங்கள் மிக்குச் செறிந்த சோலைகள் சூழ்ந்த மலைநாட்டிற்கு உரியவனே! குரங்கினங்களுள் நல்ல முகத்தை உடையவை இல்லை. (அதுபோல) பெருகி வழிவழியாக வந்த, தீய குணமுடையா ரெல்லாருள்ளும், பெருக ஆராய்ந்து, ஒருவரைத் தேறும்பொழுது, நல்ல குணமுடையார் காணப்படார். (க-து.) கீழ்மக்களுள் நல்லோர் காணப்படார். "குரங்கினுள் நன்முகத்த இல்' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com