எமரிது செய்க எமக்கென்று வேந்தன்
தமரைத் தலைவைத்த காலைத் - தமரவற்கு
வேலின்வா யாயினும் வீழார்மறுத்துரைப்பின்
ஆலென்னிற் பூலென்னு மாறு.. (பாடல்-31)
எம்மவராதலான் எமக்கு இச்செயலை முடித்துத் தருக என்று அரசன், தன்கீழ் வாழ்வாரை ஒரு செயல் செய்யும் பொருட்டு நம்பி நியமித்த இடத்து, அவன் கீழ் வாழ்வார். அவர் பொருட்டாக வேலிடத்தாயினும் வீழாதவர்களாகி, இயலாது என்று மறுத்துக் கூறலின் (அஃது), அதோ தோன்றுவது (பெரிய) ஆலமரமென்று ஒருவன் கூறலுறின், (அதற்கு மாறாக) மற்றொருவன் அது சிறிய பூலாச் செடியே என்று கூறுதலை ஒக்கும். (க-து.) அரசன் ஏவலை மேற்கொண்டார் உயிர் கொடுத்தாயினும் அதனை முடித்தல் வேண்டும். "ஆலென்னிற் பூலென்னுமாறு' என்பது பழமொழி.