பழமொழி நானூறு
நிரைதொடி தாங்கிய நீடோள் மாற்கேயும்
உரையொழியா வாகும் உயர்ந்தோர்கட் குற்றம்
மரையாகன்(று) ஊட்டும் மலைநாட! மாயா
நரையான் புறத்திட்ட சூடு. (பாடல்-48)
பெண் மான் தனது கன்றிற்குப் பால் அளிக்கும் மலைநாடனே! வரிசையாகத் தோள் வலயத்தைத் தாங்கிய நீண்ட தோளையுடைய திருமாலுக்கு, பொருந்தியிருக்கும் குற்றங்கள் ஒருநாளும் விட்டு நீங்கா. (ஆதலால்), எல்லாவகையினுமுயர்ந்தாரிடத்துள்ள குற்றம், வெண்மையாகிய மாட்டின்மேல் இட்ட சூடுபோல், ஒருநாளும் மறையா. (க-து.) பெரியோர் செய்த குற்றம் மறையாது. "நரையாம் புறத்திட்ட சூடு' என்பது பழமொழி.