பெரியோர் குற்றம் மறையாது!

பெண் மான் தனது கன்றிற்குப் பால் அளிக்கும் மலைநாடனே! வரிசையாகத் தோள் வலயத்தைத் தாங்கிய நீண்ட தோளையுடைய
பெரியோர் குற்றம் மறையாது!

பழமொழி நானூறு

 நிரைதொடி தாங்கிய நீடோள் மாற்கேயும்
 உரையொழியா வாகும் உயர்ந்தோர்கட் குற்றம்
 மரையாகன்(று) ஊட்டும் மலைநாட! மாயா
 நரையான் புறத்திட்ட சூடு. (பாடல்-48)
 பெண் மான் தனது கன்றிற்குப் பால் அளிக்கும் மலைநாடனே! வரிசையாகத் தோள் வலயத்தைத் தாங்கிய நீண்ட தோளையுடைய திருமாலுக்கு, பொருந்தியிருக்கும் குற்றங்கள் ஒருநாளும் விட்டு நீங்கா. (ஆதலால்), எல்லாவகையினுமுயர்ந்தாரிடத்துள்ள குற்றம், வெண்மையாகிய மாட்டின்மேல் இட்ட சூடுபோல், ஒருநாளும் மறையா. (க-து.) பெரியோர் செய்த குற்றம் மறையாது. "நரையாம் புறத்திட்ட சூடு' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com