பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மிக்குடையர் ஆகி மிகமதிக்கப் பட்டாரைஒற்கப் படமுயறும் என்றல் இழுக்காகும்
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மிக்குடையர் ஆகி மிகமதிக்கப் பட்டாரை
ஒற்கப் படமுயறும் என்றல் இழுக்காகும்
நற்(கு)எளி(து) ஆகி விடினும் நளிர்வரைமேல்
கற்கிள்ளிக் கையுய்ந்தார் இல். (பாடல்-36)

விளங்குகின்ற மலைமேல் உள்ள கல்லைக் கிள்ளுதலைச் செய்து கை வருந்துதலைத் தப்பினார் இல்லை. (ஆதலால்) செல்வம் மிக உடையவர்களாகி அறிவுடைமையால் மிகவும் மதிக்கப்பட்டாரை, அவர்கள் வருந்துமாறு தீய செயல்களைச் செய்வோம் என்று நினைத்தல் மிகவும் எளிமையானாலும், செயலிற் செய்தால் மிக்க துன்பமே உண்டாகும். (க-து.) அறிவுச்செல்வம் என்றிவை உடையாரைத் துன்புறுத்தலாகாது. "கல் கிள்ளிக் கைஉய்ந்தார் இல்' என்பது இச்செய்யுளில் வந்த பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com