எளியார் பகை கொள்ளற்க

கண்களின் தகைமையாயுள்ள அழகிய நீலப்பூக்கள் நிறைந்த சோலைகளையுடைய அழகிய குளிர்ந்த கடல் நாடனே! பருவ மழையன்றி வேனிற்காலத்து வெண்மழையும் மிகுந்த நீரைத் தருமாதலால்,
 எளியார் பகை கொள்ளற்க

பழமொழி நானூறு
வன்பாட் டவர்பகை கொள்ளினும் மேலாயோர்
 புன்பாட் டவர்பகை கோடல் பயனின்றே
 கண்பாட்ட பூங்காவிக் கானலந் தண்சேர்ப்ப!
 வெண்பாட்டம் வெள்ளந் தரும். (பா-71)
 கண்களின் தகைமையாயுள்ள அழகிய நீலப்பூக்கள் நிறைந்த சோலைகளையுடைய அழகிய குளிர்ந்த கடல் நாடனே! பருவ மழையன்றி வேனிற்காலத்து வெண்மழையும் மிகுந்த நீரைத் தருமாதலால், மேலானவர்கள் வலிய தகைமை உடையாரோடு மாறுபாடு கொள்ளினும்; எளிய தகைமை உடையாரோடு பகைகொள்ளுதலால் ஒரு பயனும் இன்று. (க-து.) அரசன் வலியுடையாரோடு பகை கொள்வானாயினும் அஃதில்லாரோடு கொள்ளற்க என்றது இது. "வெண்பாட்டம் வெள்ளந் தரும்' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com