நிகழ்வுகள்

தாம்பரம் அருகில் கண்டிகை- பொன்மார் இணைப்பு சாலையில் உள்ள வேங்கடமங்கலம் கிராமத்தில் அருள்மிகு திருவேங்கடப்பெருமாள்

இலட்ச தீபம்
காஞ்சிபுரம், செங்கற்பட்டை அடுத்து வையாவூர் கிராமத்தில் உள்ள அம்ருதபுரி ராமானுஜ யோகவனத்தில் ஸ்ரீமத் ஸ்வாமி ஸீதாராம ஸ்வாமிகள் அருட் தலைமையில் இலட்ச தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: ஸ்ரீநிவாச நிகேதனம்- 044 28174179.
நாள்: 14.4.2017, நேரம்: மாலை 5.00 மணி.
ஸ்ரீ ஆதிசங்கர ஜெயந்தி
குலவை குருபரம்பரா வேத வித்யா டிரஸ்ட் ஆதரவில் குரோம்பேட்டை நேரு நகரில் உள்ள சங்கரமடம் வேத பாடசாலையில் ஸ்ரீ ஆதிசங்கர ஜெயந்தி மகோத்சவம் நடைபெறுகின்றது. விழா நாள்களில் யஜுர்வேத பாராயணம், ஆதிசங்கர பகவத் பாதாள் பூஜை, உபன்யாஸம், இன்னிசைக் கச்சேரி, நாம சங்கீர்த்தன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு: 94441 39934.
நாள்: 26.4.2017 - 30.4.2017.
பிரம்மோத்ஸவம்
காஞ்சிபுரம், ஸ்ரீ பெரும்புதூர், ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யகார சுவாமி தேவஸ்தானத்தில் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் பிரம்மோற்சவம் மற்றும் ஸ்ரீ ராமானுஜர் 1000- ஆவது திருஅவதார உற்சவம் நடைபெறுகின்றது.
நாள்: 14.4.2017 - 21.4.2017 மற்றும் 22.4.2017 - 1.5.2017.
*******************
தஞ்சாவூர், திருவையாறு திருத்தலத்திற்கு அருகில் தில்லைஸ்தானம் பெரும்புலியூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சுந்தரவல்லி நாயிகா சமேத ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோத்சவம் மே-1, கொடியேற்றத்துடன் துவங்குகின்றது. மே- 4, கருட சேவை, மே-5, வெண்ணெய்த்தாழி, மே-9, திருத்தேர்.
கந்தப்புராணக் கவியமுதச் சொற்பொழிவுகள்
தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளாக திருநாவுக்கரசர் உழவாரப்பணி மன்றத்தின் சார்பில் கந்தப்புராணக் கவியமுதச் சொற்பொழிவுகள் பாடி சிவன் கோயிலில் நடைபெறுகின்றன. சொற்பொழிவாளர்: கவிஞர் சொ.சொ. மீ. சுந்தரம்.
தொடர்புக்கு: 044 2654 1836.
நாள்: 14.4.2017 - 17.4.2017, நேரம்: மாலை 6.00 மணி.
நிறைவு விழா
ஸ்ரீ வைகுண்டநாதர் குருமஹாபீடத்தின் (வேப்பம்பட்டு) 8 ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. இதனையொட்டி ஸ்ரீ நம்மாழ்வார் மற்றும் ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகளின் விக்ரஹ பிரதிஷ்டை, சிறப்பு ஆராதனை நடைபெறும்.
தொடர்புக்கு: 93801 15552/ 86083 93999.
நாள்: 16.4.2017, நேரம்: காலை 9.00 மணி.
மஹாசம்ப்ரோக்ஷணம்
விருதுநகர், காரியப்பட்டி தாலுகாவில் வரலொட்டி கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான அருள்மிகு பூ நீளா சமேத திருவேங்கிடப் பெருமாள் கோயிலில் பெருமாள் சந்நிதி மற்றும் விமானம் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு சக்கரத்தாழ்வார் ஆண்டாள், ஆச்சாரியார்களுக்கு சந்நிதிகள் அமைக்கப்பட்டு மஹாசம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 98403 66419.
நாள்: 21.4.2017, நேரம்: மாலை 8.30 மணி.
திருக்கல்யாண மகோத்சவம்
தாம்பரம் அருகில் கண்டிகை- பொன்மார் இணைப்பு சாலையில் உள்ள வேங்கடமங்கலம் கிராமத்தில் அருள்மிகு திருவேங்கடப்பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ நிவாச திருக்கல்யாண மகோத்சவம் நடைபெறுகின்றது.
நாள்: 14.4.2017, நேரம்: காலை 9.00 மணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com