நாகர்கோவில் வடசேரிக்கு அருகில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் உற்சவ விக்ரகத்தை அர்த்த ஜாம பூஜை முடிந்தவுடன் தொட்டிலில் படுக்க வைத்து நாதஸ்வரத்தில் தாலாட்டு இசைக்கின்றனர். பின்னர், பால் நிவேதிக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதை அருந்தினால் மழலை வரம் கிட்டும் என்று நம்பப்படுவதால் இந்த பூஜையின்போது மழலை வரம் வேண்டும் தம்பதியர் கலந்து கொள்கின்றனர்.