விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்

இயேசு ஒருமுறை  தம்முடைய சீடர்கள் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை அழைத்துக்கொண்டு, ஜெபம் செய்வதற்காக உயர்ந்த மலைக்கு சென்றார். மீதம் உள்ள ஒன்பது சீடர்களும் மலைக்கு கீழே நின்றார்கள். 
விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்

இயேசு ஒருமுறை  தம்முடைய சீடர்கள் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை அழைத்துக்கொண்டு, ஜெபம் செய்வதற்காக உயர்ந்த மலைக்கு சென்றார். மீதம் உள்ள ஒன்பது சீடர்களும் மலைக்கு கீழே நின்றார்கள். 

மலை அடிவாரத்தில் இயேசுவைத் தேடி ஜனங்கள் வந்து காத்திருந்தனர். இந்த நேரத்தில் பிசாசு பிடித்த ஒருவனை இயேசுவின் சீடரிடத்தில் கொண்டுவந்து சுகப்படுத்த கேட்டுக்கொண்டார்கள். ஆனால் சீடர்களால் அது முடியாமற் போயிற்று. 

பின்னர் இயேசு மலையில் இருந்து கீழே இறங்கி ஜனங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார்.  அப்பொழுது ஒரு மனுஷன் இயேசுவினிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு, "ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான். அவனை உம்முடைய சீடர்களிடத்தில் கொண்டுவந்தேன்; அவனைச் சொஸ்தமாக்க அவர்களால் கூடாமற்போயிற்று'' என்றான். (மத்தேயு 17:14-16) 

உடனே இயேசு, "அவனை என்னிடம் கொண்டுவாருங்கள்'' என்றார். பிசாசு பிடித்தவனை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள்.  இயேசு அவனைப் பிடித்த பிசாசைத் துரத்தி அவனை குணமாக்கினார்.

பின்பு, சீடர்கள் இயேசுவிடம், "எங்களால் ஏன் அந்த பிசாசை துரத்த முடியாமல் போயிற்று'' என கேட்டனர். அதற்கு இயேசு, "உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'' என்றார். 

ஆகவே பிசாசை துறத்தவேண்டுமானாலும், நோய்களைக் குணமாக்க வேண்டுமென்றாலும் நம்மிடம் விசுவாசம் மிகவும் தேவை. கடுகளவு விசுவாசம் என்றால் என்ன? கடுகு சிறியதாய் இருந்தாலும், அது பூரணமாயிருக்கிறது. கொஞ்சம் விசுவாசமிருந்தாலும் கூட, அது பூரணமாயிருக்கும்போது, மலைகள் பெயர்ந்து தள்ளுண்டு போகும். 

விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் என்று யாக்கோபு எழுதுகிறார், "அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன். சந்தேகப்படுகிறவன், காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. இருமனமுள்ளவன், தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.'' (யாக். 1:6-8). 

விசுவாசத்தினாலே பழைய ஏற்பாட்டிலுள்ள அநேக பரிசுத்தவான்கள்,  ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள், யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்.

கர்த்தர் நம்முடைய கைகளிலே விசுவாசம் என்கிற பட்டயத்தை தந்திருக்கிறார். இது ஆவியின் பட்டயம். இயேசு ஜனங்களின் விசுவாசத்தின்படியே, அவர்களுக்கு அற்புதம் செய்தார். இதை எனக்குச் செய்ய வல்லமை உண்டு என்று விசுவாசிக்கிறீர்களா? என்று கேட்டார். ஆம், என்று ஜனங்கள் சொன்னபோது, அவர்கள் விரும்பின அற்புதங்கள் நடந்தன. பிசாசுகள் நீங்கிப் போயின. சுகமும், ஆரோக்கியமும் அடைந்தார்கள். விசுவாசமில்லாதவர்களை, அவிசுவாசிகள் என்றும், அற்ப விசுவாசிகள் என்றும், வேதம் அழைக்கிறது.

நாம் கர்த்தருக்காக பெரிய காரியங்களை செய்ய வேண்டுமென்றால், உங்களுடைய விசுவாசத்தை வாயினால் அறிக்கையிட வேண்டும். என் தேவன் இதை செய்ய வல்லவர். அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை, நான் அவரை விசுவாசித்து, அவரை சார்ந்துகொள்ளுகிறேன். கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் என்று அறிக்கை செய்யவேண்டும். அப்பொழுது கர்த்தர், முடியாதவைகளை முடிய வைக்கிறதைக் காணலாம்.
- ஒய்.டேவிட் ராஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com