ஸ்ரீ அன்னையின் அமுத மொழிகள்!

பிப்ரவரி 21 அன்று ஸ்ரீ அன்னையின் 139 ஆவது பிறந்தநாள். பாரீஸில் 1878 இல் பிப்ரவரி 21 ஆம் நாள் பிறந்த இவருக்கு ஐந்து வயதிலேயே  பக்தி மார்க்கத்தில் ஈடுபாடும் யோக வாழ்க்கையில் பிடிப்பும் ஏற்பட்டது.
ஸ்ரீ அன்னையின் அமுத மொழிகள்!

• பிப்ரவரி 21 அன்று ஸ்ரீ அன்னையின் 139 ஆவது பிறந்தநாள். பாரீஸில் 1878 இல் பிப்ரவரி 21 ஆம் நாள் பிறந்த இவருக்கு ஐந்து வயதிலேயே  பக்தி மார்க்கத்தில் ஈடுபாடும் யோக வாழ்க்கையில் பிடிப்பும் ஏற்பட்டது. இவர் தனது கணவருடன் இந்தியா வந்து 1914 இல் புதுவையில் ஸ்ரீ அரவிந்தரை சந்தித்த போது இத்தனை நாள்களாக தேடிய குரு இவர்தான் என்பதை அறிந்தார். எனவே 1920 இல் இந்தியா வந்தவர் தனது கடைசி காலம் வரை இங்கேயே தங்கிவிட்டார். அவர் 1978 நவம்பர் 17 ஆம் நாள் தன் உடலை நீத்தார். 

• நீ எதைச் செய்தாலும் எப்போதும் இறைவனை நினைவில் கொள். அச்சமுற்றுக் கலக்கமுடன் உன் வருங்காலத்தை எதிர் நோக்காதே. நீ எப்படி இருந்தாய் என்பதை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காதே. எப்படி இருக்க விரும்புகிறாய் என்பதை மட்டும் நினை. 
நீ நிச்சயம் முன்னேறுவாய்.

• உலகம் துயரங்கள் நிறைந்ததுதான், ஆனால் நம்மால் அதை உருமாற்றம் செய்ய முடியும்.

• கோபமும் பயமும் உங்கள் நோயை நீட்டிக்கும். அமைதியும் சாந்தமும் உங்களை குணபடுத்தும். அற்புதமான பேச்சைவிட ஒரு துளி அன்பினால் அதிகமாக சாதிக்க முடியும்.

• தீமைகள் ஏன், எப்படி வருகின்றன என்று ஆராய்ச்சி செய்வதில் பயன் இல்லை. 
அவைகள் எங்கும் இருக்கின்றன அவைகளை அசட்டை செய். நல்ல விஷயங்களில் மனதினை செலுத்து எல்லாம் நலமாகும்.
- ந.ப.ஹரிணி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com