நிகழ்வுகள் 

பகவானது அவதாரலீலைகளைக் காதாரக் கேட்டு அவற்றை சங்கீர்த்தனம் செய்வது மிகவும் உத்தமமான தர்மம் ஆகும்.

ஸ்ரீராதாமாதவ திருக்கல்யாண மஹோத்ஸவம்
பகவானது அவதாரலீலைகளைக் காதாரக் கேட்டு அவற்றை சங்கீர்த்தனம் செய்வது மிகவும் உத்தமமான தர்மம் ஆகும். மேலும் பகவானுடயை கல்யாண குணவைபவங்களை நாம சங்கீர்த்தனம் செய்வதன் மூலம் பக்தி தானாகவே வளர்கிறது. பரமாத்மாவும் ஜீவாத்மாவும் இணைவதே இறைவனது திருக்கல்யாண லீலையாகும். இதைக் கருத்தில் கொண்டு முக்கியமாக, ராதாகல்யாண உற்சவம் பல இடங்களில் கொண்டாடப்படுகின்றது.
முற்றிலும் பெண்களே பங்கேற்கும், ஸ்ரீமதி கல்யாணி மார்க்கபந்து மற்றும் ஞானானந்த மாதர் மண்டலியினர் மூலம் ஸ்ரீராதா மாதவ திருக்கல்யாண மகோத்ஸவம் சென்னை மயிலாப்பூர் அபிராமபுரத்தில் உள்ள ஸ்ரீசங்கர குருகுல வளாகத்தில் மார்ச் 24 இல் தொடங்கி மூன்று நாள்களுக்கு நடை
பெறுகின்றது. மார்ச் - 26, விவாஹ மகோத்சவம் நடைபெறும். பிரபல பாகவதர்கள் குழுவினர் பங்கேற்று நாமசங்கீர்த்தன மழையை பொழிகின்றார்கள். 
தொடர்புக்கு: 93814 30775 / 93809 61682.
- விஜயலட்சுமி சந்திரமெளலி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com