கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதற்கும் சில காலநேரங்கள் உண்டு. காலையில் கோயில் திறந்த உடனேயே சென்று சாமி கும்பிடக் கூடாது. குருக்கள் முதலில் தீபம் ஏற்றி ஆராதனை காட்டிய பிறகே நாம் சென்று தரிசிக்க வேண்டும். திரை போடப்பட்ட காலநேரங்களிலும் சந்நிதியில் தீபம் இல்லாத போதும் சாமி தரிசனம் செய்யக்கூடாது. கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி வந்ததும் உடனே கால்களைக் கழுவக்கூடாது. சிறிது நேரம் கழித்த பின்னரே காலைக் கழுவ வேண்டும்.
- முக்கிமலை நஞ்சன்