பழநியின் மற்றொரு பெயர் திருஆவினன்குடி. லட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி ஆகியோர் முருகனை வழிபட்ட இடம் என்பதால் " திருஆவினன்குடி' எனப் பெயர் பெற்றது. திரு (லட்சுமி), ஆ (காமதேனு), இனன் (சூரியன்), கு (பூமாதேவி), டி (அக்னி) ஆகியோரின் பெயர்களை குறிப்பாகக் கொண்டு அமைந்த பெயர் தான் " திருஆவினன்குடி!'
- என். கிருஷ்ணமூர்த்தி