உறையூரில் உள்ள பஞ்சவர்னேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் பெயருக்கு ஏற்றாற்போல 5 நிறங்களை 5 கால பூஜையின்போது காட்டுகின்றார். தங்கம், வெண்மை, செம்மை, கருமை, புகைமை என 5 நிறங்களை பிரம்மனுக்கு காட்டியருளினார். இப்போதும் ஒவ்வொரு கால பூஜைக்கும் இறைவன் ஒவ்வொரு நிறமாக காட்சி தருகிறார்.
*ராமேஸ்வரத்தில் திருப்பதி தேவஸ்தானம் "திருப்பதி' என்ற பெயரில் கட்டி கொடுத்திருக்கும் 16 அறைகளுக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர்களும் ராமாயணத்தை நினைவூட்டுவதாகவும் பக்தித் தொண்டாற்றிய பெரியார்களை சிறப்பிப்பதாகவும் அமைந்துள்ளன.
*மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள துர்க்கையம்மன் கோயிலில் யானை மூலம் அம்மனுக்கு பூஜை நடத்தப்படுகிறது. இது எங்கும் இல்லாத ஓர் அற்புதமான பூஜையாகும்.
* திருவாரூர் தூவா நாயனார் கோயிலில் உள்ள அசலேஸ்வரர் திருக்கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டுமே விழும். மற்ற திசைகளில் விழாது.
- ஆறுபாதி புகழேந்தி