துயர் துடைக்கும் பைரவர் வழிபாடு!

சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராக வணங்கப்படுபவர் மகா பைரவர்.  சிவ பெருமானின் ஐந்து குமாரர்களாக கணபதி, முருகன், பைரவர், வீரபத்திரர், சாஸ்தா என்று சொல்லப்படுகிறது.
துயர் துடைக்கும் பைரவர் வழிபாடு!

சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராக வணங்கப்படுபவர் மகா பைரவர்.  சிவ பெருமானின் ஐந்து குமாரர்களாக கணபதி, முருகன், பைரவர், வீரபத்திரர், சாஸ்தா என்று சொல்லப்படுகிறது. ஐவரில் பைரவ மூர்த்தி, பொதுவாக எல்லா ஆலங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையிலே பன்னிரு கரங்களுடன்  நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நின்றபடி நிர்வாணக் கோலத்தினராய் நீல மேனியராய் நாய் வாகனத்துடன் காட்சி தருபவர். 
இவர் சிவகணங்களுக்கு தலைவராக விளங்குபவர்.  ஆணவம் கொண்ட பிரம்மனின் சிரம் கொய்தவர். மன்
மதனின் கர்வம் அடங்கச் செய்தவர். முனிவரின் சாபத்திலிருந்து தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்தவர். சனீஸ்வரருக்கு குருவாக விளங்குபவர். சூரியன் மகனான யமதர்மனால் அலட்சியப் படுத்தப்பட்டு கௌரவக் குறைவை அடைந்த சனி, அவருடைய தாய் சாயாதேவியின் அறிவுரைப்படி பைரவரை வழிபட்டு அவருடைய அருளால் நவக்கிரக பதவி பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.  காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்ய பூஜா விதி 
கூறுகிறது. 
 ஒரு சமயம், அந்தகாசுரனின் அட்டூழியங்களை ஒழிக்க தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, அவர் தன் இதய அக்னியிலிருந்து பைரவரை உருவாக்க அது விஸ்வரூப
மெடுத்து ஒன்றாகி, ஒன்றிலிருந்து எட்டாகி, எட்டிலிருந்து அறுபத்து நான்காகி அசுரர்களை முழுவதுமாக அழித்து தேவர்களுக்கு அமைதியை வழங்கியதாகவும் இதனால் மகிழ்வடைந்து தேவர்கள் அறுபத்து நான்கு யோகினிகளை அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. 64 யோகினிகளின் உபாசனை வடநாட்டில் பரவலாகக் காணப்படுகிறது. அவ்வாறு 64 யோகினிகளை உபாசிக்கும்போது 64 பைரவர்களுக்கும் சேர்ந்தே உபாசிக்கப்படுகிறது. 
சிவபெருமான் தடுத்தும் தன் தந்தை செய்த யாகத்திற்குச் சென்ற தாக்ஷôயிணி அவமானப்பட்டு, யாகத்தீயில் விழுந்து உயிர்விட, அந்த உயிரற்ற உடலை சுமந்து கொண்டு சிவபெருமான் பித்தனாக அலைய, அந்த கோலத்தைக் காணச் சகிக்காத மகாவிஷ்ணு, சிவபெருமானை அந்த மாயையிலிருந்து அகற்றுவதற்காக சக்ராயுதத்தினால் அவ்வுடலைச் சிதைத்தார். அவ்வாறு சிதைக்கப்பட்ட சதி தேவியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் சக்தி பீடங்களாக மாறின. ஒவ்வொரு சக்திபீடத்தையும் ஒவ்வொரு பைரவர் காவல் காக்கிறார்கள் என்கிறது புராணம்.
எட்டு பைரவர்கள் விசேஷமாகக் கொண்டாடப்
படுகிறார்கள். அந்த எட்டு பைரவர்களும் எட்டு திசை
களைக் காப்பவர்களாகக் கருதப்படுகின்றனர்.  
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதல் வடிவமான "அசிதாங்க பைரவர்' காசி மாநகரில் அன்னப் பறவையினை வாகனமாகக் கொண்டு விருத்தகாலர் கோயிலில் அருள்செய்கிறார்.  குருகிரக தோஷம் நீங்க இவரை வணங்குகிறார்கள். சப்த மாதாக்களில் "பிராஹ்மி'  இவருடைய சக்தி வடிவமாக விளங்குகிறாள்.
ரிஷபத்தினை வாகனமாகக் கொண்டு  காசி மாநகரில் காமாட்சி கோயிலில் அருள்செய்யும் "ருருபைரவர்' அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார்.  சுக்கிர தோஷத்தைப் போக்கும் இவர், சப்த கன்னியரில்  காமாட்சியை தன் சக்தியாகப் பெற்று விளங்குகிறார். 
மூன்றாவது தோற்றமான  "சண்ட பைரவர்' காசி மாநகரில் துர்க்கை கோயிலில் மயிலை வாகனமாகக் கொண்டு அருள்செய்கிறார். செவ்வாய் கிரக தோஷத்தை நீக்கும் இவர் சப்த கன்னியரில் கெüமாரியைத் தன் சக்தியாகக் கொண்டிருக்கிறார்.
"குரோத பைரவர்' அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இவர் காசி மாநகரில் காமாட்சி கோயிலில் கருடனை வாகனமாக கொண்டு அருள்பாலிக்கிறார். சனி கிரக தோஷம் நீங்க இவர் வணங்கப்படுகிறார்.  இவருடைய சக்தி வடிவமாக வைஷ்ணவி விளங்குகிறாள்.
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் "உன்மத்த பைரவர்' ஐந்தாவது தோற்றமாவார். இவர் காசி மாநகரில் பீம சண்டி கோயிலில் குதிரையை வாகனமாக கொண்டு விளங்குகிறார்.  நவக்கிரகங்களில் புதன் கிரக தோஷத்தை நீக்கும் இவர் வாராகியைத் தன் சக்தியாகக் கொண்டிருக்கிறார்.  ஆறாவது தோற்றமான "கபால பைரவர்'  காசி மாநகரில் லாட் பஜார் கோயிலில் கருடனை வாகனமாக க் கொண்டு அருள்செய்கிறார். சந்திர கிரக தோஷத்தை நீக்கும் இவரின் சக்தியாக  இந்திராணி விளங்குகிறாள். இவர் சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்.  
பைரவ உருவங்களில் பல உண்டு என்றாலும் பிரதானமானவராகக் கருதப்படுபவர் கால பைரவர். எண்ணற்ற மக்கள் கால பைரவரின் புனித ரட்சையை (காசிக்கயிறு) அணிந்து கொண்டு எவ்வித அச்சமும் இல்லாதவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். காசி யாத்திரையின் போது இவரை வணங்காவிட்டால் காசி யாத்திரையின் பலன் கிடைக்காதென்று கூறப்படுகிறது.
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமான "பீக்ஷன பைரவர்' காசி மாநகரில் பூத பைரவ கோயிலில் சிங்கத்தை வாகனமாகப் பெற்று அருள்செய்கிறார். கேது கிரகதோஷம் நீங்க இவர் வணங்கப்படுகிறார். இவருடைய சக்திவடிவமாக  சாமுண்டி விளங்குகிறாள்.
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் "சம்ஹார பைரவர்'  எட்டாவது தோற்றமாகும்.  இவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோயிலில் நாயை வாகனமாக கொண்டு அருள்செய்கிறார்.  ராகு கிரக தோஷம் நீங்க வணங்கப்படும் இவரின் சக்தியாக சண்டிகை விளங்குகிறாள்.  பஞ்சகுண சிவமூர்த்திகளில் பைரவர் வக்ர மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.
பைரவரை  தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை சாற்றி, ராகு காலத்தில் பூஜை செய்வதும் தேய்பிறை அஷ்டமியில் பூஜிப்பதும் சிறப்பாகக் கூறப்படுகிறது. அவர் பூஜையில் மல்லிகையைத் தவிர்க்க வேண்டும். ஈசனின் அம்சமான இவரும் அபிஷேகப்பிரியராவார். பன்னிரண்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் விளங்குகிறார். பைரவரின் அபிஷேகத்திற்கு சந்தனம் , புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் காலபைரவாஷ்டமி  அன்று அவர் ஆவிர்பவித்ததாகக் கூறப்படுகிறது. இவ்வருடம், 11.11.2017 அன்று "காலபைரவாஷ்டமி' கொண்டாடப்படுகிறது. 
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஆற்றும் இந்த பைரவரின் வழிபாடு வடக்கே இருந்து வந்த கபாலிக வழிபாட்டின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.  ஆலயங்களில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. விசேஷ தினங்களில் இவருக்கு நெய் அபிஷேகம் சிறப்பாக செய்யப்படுகிறது. அந்த விசேஷ தின பூஜையில் எட்டுவித பட்சணங்களும், எட்டுவித அன்னங்களும் நைவேத்தியப் பொருட்களாக நிவேதிக்கப்படுகின்றன. இன்னும் எட்டுவித மலர்களால் அர்ச்சனை செய்து எட்டுவித ஆரத்திகளும் செய்யப்படுகின்றன.
பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகின்றாராம். அவளுடன் இறைவனும் பைரவராக தலத்தை வலம் வருவார் என்பதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றார்கள்.
பிரம்மனின் தலையைக் கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவனை வேண்ட, அவர் பைரவரை பூலோகம்  சென்று பிட்ûக்ஷ எடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்றும் கூற, அவரும் பூவுலகம் வந்து, பிட்ஷை் ஏற்று வரும்போது திருவலஞ்சுழியில் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிற்று. அங்கு அருள்புரியும் ஸ்வேத விநாயகரை வழிபட, விநாயகர் தோன்றி, "உம் கையில் உள்ள சூலாயுதத்தை கிழக்கு நோக்கி வீசினால் அது எங்கு விழுகிறதோ அந்த இடத்தில் இருப்பாயாக'' என கூற, பைரவரும் அவ்வாறே கிழக்கு நோக்கி சூலாயுதத்தை வீச, அது விழுந்த இடமே தற்போதுள்ள ஷேத்திரபாலபுரம் ஆகும். சூலம் விழுந்த இடம் தீர்த்தமாயிற்று. கால பைரவருக்கு úக்ஷத்திர பாலகர் என்று பெயர். அவர் பெயராலேயே அவ்வூரும் úக்ஷத்திர பாலபுரம் என்று வழங்கலாயிற்று. இந்த ஊர் மயிலாடுதுறை தாலுகா, குத்தாலத்திற்கு அருகிலுள்ளது. காசியைப் போன்றே பைரவ வழிபாட்டிற்கு சிறப்புற்று விளங்குகிறது. 
பைரவரை வணங்குவதால் வாழ்வில் வரும் அனைத்து தடைகளும் நீங்கும். ஏவல், பில்லி சூனியம் இவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும். தன தான்ய சம்பத்துக்களுடன் சிறப்பாக வாழலாம். ஒருவருக்கு எந்த கெட்ட நேரம் நடந்தாலும் அதனை மாற்றக்கூடியவர். ஏழரைச் சனியால், அஷ்டமச் சனியால் ஏற்படக்கூடிய இடர்பாடுகளுக்கு பைரவர் வழிபாடு ஒரு பரிகாரமாகும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com