சாந்தமுடையோர் பேறு பெற்றோர்

கனிவு என்றால் அன்பு மற்றும் பரிவு ஆகியவை நயமாக அல்லது பணிவாக வெளிப்படுத்துதல் என பொருள் படும். திருமறை நூலில் கலாத்தியர்
சாந்தமுடையோர் பேறு பெற்றோர்

மலைப் பொழிவில் இயேசு கிறிஸ்து மூன்றாவது கருத்தாக மொழிந்தது.
"கனிவுடையோர் அல்லது சாந்தமுடையோர் பேறுபெற்றோர்; 
ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமை சொத்தாக்கிக் கொள்வர்'' என்பதாகும் (மத்தேயு -5:5)
கனிவு என்றால் அன்பு மற்றும் பரிவு ஆகியவை நயமாக அல்லது பணிவாக வெளிப்படுத்துதல் என பொருள் படும். திருமறை நூலில் கலாத்தியர் 5:22 இல் தூய ஆவியின் கனியோ அன்பு, மகிழ்ச்சி, அமைதி. பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, தன்னடக்கம் என ஒன்பது பண்புகளை எடுத்துரைக்கும். இது தூய ஆவிக்கு அதாவது கடவுளுக்கு  விருப்பமானது. விருப்பமில்லாதது ஊனியல் பின் செயல்களான பரத்தமை, கெட்ட நடத்தை,, காமவெறி, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம்  என்பன (களாத்தியார் 5:19:21)
சில நல்ல பெற்றோர்கள், தம் மக்கள் பெயருக்கேற்று வளர வேண்டும். வாழ வேண்டும் என விரும்பி சாந்தா, சாந்தி. சாந்தன், கனி, கனிமொழி, கனியன் என்றெல்லாம் பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். இறைவன் அதைத்தான் விரும்புகிறார். அதனால்தான் தன் மலைப்பொழிவில் சாந்தமுடையோர் அல்லது கனிவுடையோர் பேறு பெற்றோர் என உலக மக்களுக்கு விளக்குகின்றார். பொறுமையுள்ள தாழ்மையான அன்புடன் கருணையோடு ஆன்மாக்களைக் கைப்பற்ற முயற்சிக்காத குருக்கள், கடவுளுக்கு எந்த ஓர் ஆன்மாவையும் சம்பாதிக்க மாட்டார்கள், அவர்கள் ஆயுதமேந்திய போர்ச் சேவகரைப் போன்று கடுமையான தாக்குதல்களைச் செய்வார்கள். சகிப்புத்தன்மையில்லாமல் கடுமையாக நடந்து கொள்வதால் அவர்கள் ஆன்மாக்களை இழந்து போகிறார்கள். ஆன்மாக்கள் தூயவர்களாக இருந்தால் ஒளியைச் சென்றடைவதற்கு குருக்கள் தேவையில்லையே. அதுபோன்று நீதிபரிபாலகர்களும் மருத்துவர்களும் தங்களைத் தேடி நீதிக்காகவும் உடற் சுகத்திற்காகவும் வரும் ஆன்மாக்களை விரட்டாதீர்கள். அன்பினால் அவர்களை கவர்ந்திருழுங்கள். ஏனெனில் மனத் தரித்திரம் எப்படி அன்பாயிருக்கிறதோ, அப்படியே மனத்தாழ்ச்சியும். அன்புதான் உங்கள் தாழ்மையினால் அதாவது அன்பாகவும் தாழ்ச்சியாகவும் கனியாகவும் சாந்தமாகவும் இருப்பதனால் அது பகையையும் ஆங்காரத்தையும் வெல்லும். "இழிந்த அரசனான பகையையும் ஆங்காரத்தையும்  ஆன்மாக்களிலிருந்து வெளியே துரத்தும். உலகம் உங்களுக்குச் சொந்தமாகும்'' என்கிறார் இறைமகன் இயேசு. 
எனவே, அவரவர் தம் கடமைகளில் கனிவோடு நடந்து, சுக ஆன்மாக்களை அன்பால் கவர்ந்திட ஆண்டவர் இயேசுவின் மலைப்பொழிவை மனதில் நிறுத்திவாழ்வோம்.
- ஜி.ஐ. பிரான்சிஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com