நிகழ்வுகள்

சென்னையை அடுத்த அம்பத்தூர், மேனாம்பேடு கிராமத்தில் ஈசான்ய லிங்கமாக விளங்கும் ஸ்ரீ அன்னபூரணி சமேத ஸ்ரீ ஆத்மநாத சுவாமி ஆலயத்தில் தீபாவளி திருநாளில் லட்டு வைபவம் நடைபெறுகின்றது.

ஸ்ரீ சிவன் சார் ஜெயந்தி மகோத்சவம்
காஞ்சி மகா சுவாமிகளின் பூர்வாச்ரம இளைய சகோதரர் பூஜ்ய ஸ்ரீ சிவன் சார் அவர்களின் ஜெயந்தி விழா அவரது ஆத்மார்த்த சீடர்களால் இன் போஸிஸ் ஹால், ஸ்ரீராமகிருஹ்ணா மிஷன் பள்ளி, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர் (விவேக் அருகில்) நடத்தப்படுகின்றது. 
தொடர்புக்கு: ஜி. சிவராமன் 96000 15230/ 73584 81420.
நாள்: 14.10.2017 (புரட்டாசி, பூசம்), நேரம்: மாலை 6.00 மணி. 
கந்தசஷ்டி வேல் பூஜை விழா
சென்னை, தங்கசாலை தெருவில் கந்தகோட்டம் அருகில் செயல்பட்டுவரும் சைவ சமய பக்த ஜன சபை என்ற அமைப்பு 1904 ஆம் வருடம் துவங்கப்பட்ட பெருமையுடையது. இவ்வளாகத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியப்பெருமானுக்கு கந்தர்சஷ்டி விழாவை முன்னிட்டு அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 25 ஆம் தேதி வரைஅலங்கார தூப தீப நைவேத்தியாதி சோடசோபஸôரங்களும் தொடர்ந்து மாலை வேளைகளில் கந்தபுராணம் தொடர் சொற்பொழிவும் திருப்புகழ் பாராயணமும் நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 044 2535 4490.
"சிக்கல்' தலத்தில் கந்த சஷ்டி விழா
நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் அருள்மிகு நவநீதசுவர சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா அக்டோபர் 20 - இல் தொடங்கி, அக்டோபர் 29 வரை நடைபெறுகின்றது. முக்கியமான நாள்கள்: அக்டோபர்: 22 - தங்கமயில் வாகனம்; 24- திருத்தேர், வேல் வாங்குதல்; 25- சூரசம்ஹாரம்; 26- தெய்வசேனை திருக்கல்யாணம்; 27 - வள்ளி திருக்கல்யாணம்.
1008 லட்டு அலங்காரம்
கோடம்பாக்கம் ஆண்டவர் நகர், ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தில் தீபாவளித் திருநாளன்று அம்மனுக்கு 1008 லட்டு அலங்காரம் நடைபெறுகின்றது. மறுநாள், அமாவாசையன்று மாலை பிரத்யங்கரா தேவி ஹோமம் நடைபெறும். முன்னதாக, அக்டோபர் 13 ஆம் தேதியன்று காலை சந்தான கோபால கிருஷ்ண யாகமும்; கருமாரியம்மனுக்கு 508 புடவை அலங்காரமும் (கிருஷ்ண பகவான் திரௌபதையம்மனுக்கு வஸ்திரம் அளிக்கும் காட்சி) பிரத்யேகமாக நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: என். சங்கரன்- 72998 16626/ 98843 28777.
நாள்: 18.10.2017.
லட்டு வைபவம்
சென்னையை அடுத்த அம்பத்தூர், மேனாம்பேடு கிராமத்தில் ஈசான்ய லிங்கமாக விளங்கும் ஸ்ரீ அன்னபூரணி சமேத ஸ்ரீ ஆத்மநாத சுவாமி ஆலயத்தில் தீபாவளி திருநாளில் லட்டு வைபவம் நடைபெறுகின்றது. சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் ஏகாதச பைரவர் வீற்றிருந்துஅருள்பாலிக்கும் இவ்வாலத்தில் ஸ்ரீ அன்னப்பூரணி அம்மனுக்கு சுமார் ஆயிரம் லட்டுகள் படைத்து, லட்டு வைபவம் கோலாகலமாக நடைபெறும். அன்றைய தினம் அம்பாள் புறப்பாடாகி முக்கிய வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நாள்: 18.10.2017.
தொடர்புக்கு: 90030 86204.
திருபவித்ரோத்ஸவம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், சந்திய விஜய நகரத்தில் ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில் திருபவித்ரோத்ஸவத் திருவிழா நடைபெறுகின்றது. அக்டோபர் 15 ஆம் தேதியன்று புஷ்பயாகம் எனப்படும் சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது.
நாள்: 14.10.2017 - 16.10.2017.
தொடர்புக்கு: 94439 64738.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com