நிகழ்வுகள்

தாமிரபரணி நதியின் வடகரையில் இருக்கும் கார்க்கோடக úக்ஷத்திரத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் பெரிய பிரான் என்கின்ற ஸ்ரீ பிரஹன் மாதவன் சந்நிதியில் ஐப்பசி பிரம்மோத்ஸவம்

பிரம்மோத்ஸவம்
தாமிரபரணி நதியின் வடகரையில் இருக்கும் கார்க்கோடக úக்ஷத்திரத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் பெரிய பிரான் என்கின்ற ஸ்ரீ பிரஹன் மாதவன் சந்நிதியில் ஐப்பசி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 19 - ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகின்றது. விழா நாள்களில் காலை வேளைகளில் பெருமாள், தேசிகன் புறப்பாடும்;  மாலை சிறப்பு வாகனங்களில் பெருமாள் புறப்பாடும் நடைபெறும். 
தொடர்புக்கு: 044 2267 2928.
நாள்: 20.10.2017 - 22.10.2017.
திருப்பணி
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுக்கா, ஆளப்பிறந்தான் வட்டம், காஞ்சிரான்வயல் கிராமத்தில் அமைந்துள்ள "அருள்மிகு ஸ்ரீ கழனிஉடையார்' என்கின்ற அய்யனார் திருக்கோயிலில் விரைவில் குடமுழுக்கு நடைபெற வேண்டி திருப்பணி வேலைகள் நடைபெறுகின்றது.  பக்தர்கள் இவ்வாலயத் திருப்பணியில் பங்கு கொண்டு அய்யனாரின் அருளைப் பெறலாம்.
தொடர்புக்கு: 72998 42308/  98659 69399. 
பவித்ரோத்ஸவம்
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருள்மிகு ஸ்ரீ பூவராஹப் பெருமாள் சந்நிதியில் திருப்பவித்ரோத்ஸவம் நவம்பர் 2 -இல் தொடங்கி நவம்பர் 4 -ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. மேற்படி நாள்களில் திருமஞ்சனம், சிறப்பு ஹோமங்கள், பவித்திரமாலை சாற்றுதல், போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நவம்பர் 4 -ஆம் தேதி இரவு ஸ்ரீ யக்ஞவராஹ மூர்த்தி உற்சவர் திருவீதி உலா நடைபெறும்.
தொடர்புக்கு: பவித்ரோத்ஸவ கமிட்டி- 94431 81679/ 90920 16027. 
மஹோத்ஸவம்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திப்பிராஜபுரம், சென்னியமங்கலம் கிராமத்தில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிஅருள்புரியும் இரட்டை லிங்கேஸ்வரர் ஸ்ரீ உண்ணாமுலை அம்பிகா சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்; ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ சொக்கநாதர் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு ஸம்வத்ஸன மஹோத்ஸவம் நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 94430 86587/  81242 47647.
நாள்: 1.11.2017.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com