நிகழ்வுகள் 

குமரன்குன்றம் திருப்புகழ் மன்றம் மற்றும் முருகுகவி அறப்பணி திருப்புகழ் ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்தும்

 தமிழ்ப்புத்தாண்டு படித்திருவிழா
 குமரன்குன்றம் திருப்புகழ் மன்றம் மற்றும் முருகுகவி அறப்பணி திருப்புகழ் ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்தும் 40 -ஆவது ஆண்டு மாபெரும் படித்திருவிழா ஏப்ரல் - 14 -ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று குரோம்பேட்டை குமரன் குன்றம் அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறுகின்றது. நிகழ்ச்சிகள் அன்று காலை 5.30 மணியிலிருந்து துவங்குகின்றது. பல்வேறு திருப்புகழ் சபையினர் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்று மலைக்கு செல்லும் படிகளில் திருப்புகழ் இன்னிசை வழங்குவார்கள்.
 தொடர்புக்கு: 044- 2223 5645/ 98414 20780.
 வஸந்தோற்சவம்
 திருவிசலூர் (வேப்பத்தூர் -வழி) ஸ்ரீதர அய்யாவாள் சந்நிதியில் ஏப்ரல் - 18, அட்சய திருதியை அன்று வஸந்தோற்சவம் சம்பிரதாய பஜனை, சகஸ்ர நாமபாராயணம், திவ்யநாம பஜனை போன்ற வைபவங்களுடன் நடைபெறுகின்றது. ஏப்ரல் -19, ஸ்ரீ கோணங்கிதாஸர் ஸேவை, மஹாதீபாராதனையுடன் விழா முடிவடைகின்றது.
 தொடர்புக்கு: எஸ். ராமநாதன்- 0435 2461616.
 குருபூஜை
 தூத்துக்குடி மாவட்டம், ஏரல், ஸ்ரீ சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் 110 -ஆம் ஆண்டு குருபூஜை, ஏப்ரல் - 16 அன்று சிறப்பு தீபாராதனை, அன்னதானத்துடன் நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 04630 271281, 89037 21536.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com