துன்பங்கள் துடைக்கும் முத்துமாரியம்மன்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்- வந்தவாசி செல்லும் பாதையில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது பட்டணம் என்னும் கிராமம்! இங்கு, கோயில் கொண்டருளும் அருள்மிகு முத்துமாரியம்மனை
துன்பங்கள் துடைக்கும் முத்துமாரியம்மன்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்- வந்தவாசி செல்லும் பாதையில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது பட்டணம் என்னும் கிராமம்! இங்கு, கோயில் கொண்டருளும் அருள்மிகு முத்துமாரியம்மனை கிராம மக்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் வழிபட்டு வருகின்றனர். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாக இத்திருக்கோயிலை அமைத்துள்ளனர்.
 அம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் உடுக்கை, பாசம் ஏந்தி அபய கரத்துடன் அருள்புரிகின்றாள். திருப்பாதங்களுக்குக் கீழ் புறத்தில் ரேணுகா தேவியின் அம்சமாக சிரசு பகுதி மட்டும் காணப்படுகின்றது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் வாணவேடிக்கையுடன் அம்மன் வீதிவுலா வரும். தீமித்திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றது. மிகவும் சக்தி வாயந்தவள் இந்த அம்மன். அம்பாளை வழிபட்டு வந்தால் நம் துன்பங்கள் அனைத்தும் அகலும்.
 2014- ஆம் ஆண்டு பெய்த பெருமழையில் கோயிலின் மீது இடி- மின்னல் தாக்கி விரிசல் கண்டது. எனவே, ஊர் மக்கள் இணைந்து புதியதாக கோயில் கட்டத்துவங்கினர். திருப்பணி வேலைகள் பாதியளவுக்கு முடிவடைந்துள்ள நிலையில் திருப்பணியை மீண்டும் தொடர பொருளுதவி தேவைப்படுகிறது. பக்தர்கள் இவ்வாலயத் திருப்பணியில் பங்குகொண்டு அம்மனின் அருளைப் பெறலாம்.
 தொடர்புக்கு: 90872 21887 / 78451 38956.
 - மா. கார்த்திக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com