நிகழ்வுகள்

சென்னை, தெற்கு மலையம்பாக்கம், அருள்மிகு மரகதாம்பிகை சமேத அருள்மிகு மஹாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விநாயகர்

மஹாகும்பாபிஷேகம்
சென்னை, தெற்கு மலையம்பாக்கம், அருள்மிகு மரகதாம்பிகை சமேத அருள்மிகு மஹாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விநாயகர், முருகர், அருள்மிகு மரகதாம்பிகை சமேத மஹாலிங்கேஸ்வரர் மற்றும் கோஷ்ட தெய்வங்களுக்கு கும்பாஷேக விழா நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 98413 56272.
நாள்: 24.08.2018, நேரம்: காலை 7.45 - 8.45 மணி.
***********
சிவகங்கை மாவட்டத்தில் சொக்கநாதபுரம் என்னும் சிற்றூர் கல்லலுக்கு அருகே 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு, நான்கு திசைக்கும் நான்கு திருக்கோயில்களாக ஸ்ரீ கற்பக விநாயகருடன் கூடிய ஸ்ரீ வேலாயுத சுவாமி திருக்கோயில், ஸ்ரீ காளகாம்பாள், ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி மற்றும் ஸ்ரீ சிறுதேன்மொழி அம்பாள் சமேத ஸ்ரீ திருக்கண்ணன்குடி நாயனார் திருக்கோயில்கள் தனித்தனியாக அமைந்துள்ளன. இந்த நான்கு கோயில்களுக்கும் 12.09.2018 -ஆம் தேதி திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: சொக்கலிங்கம் - 94422 33982.
************
காஞ்சி மாவட்டம், வையாவூர் (செங்கற்பட்டு -படாளம் கூட்ரோடு ) செல்லும் வழியில் உள்ள அம்ருதபுரி ஸ்ரீ ராமானுஜ யோக வனத்தில் ஸ்ரீ மதுரவல்லி தாயார் சமேத ஸ்ரீநிவாஸப் பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீநவக்ரஹ விநாயகர் நூதன உற்சவர் மற்றும் பதினெட்டு சித்தர்கள், நூதன பைரவர் விமானங்களுக்கு அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம், 23.08.2018 -இல் நடைபெறுகின்றது. பூர்வாங்க பூஜைகள் ஆகஸ்ட் 22 - இல் ஆரம்பமாகிறது. 
தொடர்புக்கு: ஸ்ரீ ஸ்ரீ நிவாஸ நிகேதனம்: 044 - 28174179.
************
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருபுவனம் அருள்மிகு விராலிமலை ஸ்ரீ சதாசிவசுவாமிகள் மடலாயத்தில் பல்வேறு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றது. இங்கு, சித்த தட்சிணாமூர்த்தி விக்ரகம் பிரதிஷ்டையாகியுள்ளது. சுமார் 40 வருடங்களுக்குப்பிறகு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 23, காலை 10.45 மணி அளவில் நடைபெறுகின்றது. இதனையொட்டி யாகசாலை பூஜைகள் ஆகஸ்ட் 21- இல் ஆரம்பமாகின்றது. 
தொடர்புக்கு: 99441 78340 / 74187 43762.
வைரவிழா
காஞ்சி காமகோடி பீடத்தைச் சேர்ந்த வேத தர்மஸôஸ்திர பரிபாலன சபை கும்பகோணத்தில் இயங்கி வருகின்றது. இச்சபையின் வைரவிழா ஆண்டினை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் நடைபெறுகின்றது. தொடர்ந்து, 120, 121, 122, 123 -ஆவது வைபவங்கள் மதுரையில் ஆகஸ்ட்-18, 19 தேதிகளில் மதுரை, சங்கரமடம், வைதீக சமாஜ வளாகம், தாம்ப்ரஸ் டிரஸ்ட் மஹாலில் நடைபெறும். 
தொடர்புக்கு : 98846 55618.
**************
பெங்களூரூ, அல்சூர் பகுதியில் ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி திருக்கோயிலில் கடந்த 60 ஆண்டுகளாக ஸ்ரீதேவாரத் திருப்புகழ் அருட்பா பாராயண சபை இயங்கி வருகின்றது. இந்த சபையின் வைரவிழா, அருணகிரி நாதர் விழா ஆகஸ்ட் 17 -இல் தொடங்கி 19 -வரை நடைபெறுகின்றது. இதனையொட்டி, நிகழ்ச்சிகள் பெங்களூர் இந்திராநகர் மெட்ரோ ரயில் நிலையம் எதிரில் உள்ள பரிமள சபாங்கணா (ஸ்ரீ ராகவேந்திரமடம்) வளாகத்தில் நடைபெறுகின்றது.
திருப்பவித்ரோத்ஸவம்
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், குணசீலம் அருள்மிகு பிரஸன்ன வேங்கடாசலபதி பெருமாள் திருக்கோயிலில் திருப்பவித்ரோத்ஸவ விழா, ஆகஸ்ட் 19 -இல் தொடங்கி 23 வரையும்; தொடர்ந்து ஆகஸ்ட் 25 -ஆம் தேதி ஸ்ரீமத் விகநஸாசார்ய திருநட்சத்திர விழாவும் நடைபெறுகின்றது. மஹாபவித்ர மாலை சாற்றும் வைபவம் ஆகஸ்ட் 23, காலை 11.00 மணி அளவில் நடைபெறும். 
தொடர்புக்கு: கே.ஆர்.பிச்சுமணி அய்யங்கார்- 94863 04251.
ஆடி மாத கூழ்வார்த்தல் திருவிழா,
வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், பாண்டியநல்லூர் அருள்மிகு ஸ்ரீகனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் 12 -ஆம் ஆண்டு ஆடி மாத கூழ்வார்த்தல் திருவிழா, 19.08.2018 -அன்று காலை 7.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 90030 99048 / 94441 25383.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com