நிகழ்வுகள் 

சென்னை சிவலோகத் திருமடம் சார்பில் ஆவடி ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா பள்ளி மைதானத்தில் 13.02.18 சிவராத்திரி அன்று மாலை 5 மணி முதல் அடுத்தநாள் அதிகாலை 5 மணி வரை மாணிக்கவாசகர்

மஹா சிவராத்திரி விழா
சென்னை சிவலோகத் திருமடம் சார்பில் ஆவடி ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா பள்ளி மைதானத்தில் 13.02.18 சிவராத்திரி அன்று மாலை 5 மணி முதல் அடுத்தநாள் அதிகாலை 5 மணி வரை மாணிக்கவாசகர் திருத்தேர் ஊர்வலம், அபிஷேகம், வேதபாராயணம், திருமுறை இசை, நாட்டியம், வாதவூர் அடிகளின் அன்புரை, பேரொளி வழிபாடு சிறப்பாக நடைபெற உள்ளது. 
தொடர்புக்கு : 75023 02060 / 99529 03631.
**************
செங்கற்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோயிலிலிருந்து 4 கி. மீ. தூரத்தில் உள்ள ஸ்ரீ வில்வநாயகி சமேத துளஸீஸ்வரர் ஆலயத்தில் மஹாசிவராத்திரி விழா பிப்ரவரி -13 அன்று இரவு நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு : 94440 22133/ 99402 06679.
*************
திருக்கழுக்குன்றம், திருநிலை கிராமத்தில் சுயம்பு வடிவாய் எழுந்தருளியுள்ள அருள்மிகு பெரியாண்டவர் திருக்கோயிலில் பிப்ரவரி 13 -ஆம் தேதி மஹாசிவராத்திரி விழா, மாலை 3.00 மணி அளவில் தேவார இசை, சிறப்பு வேள்வியுடன் தொடங்கி நடைபெறுகின்றது. இரவு சிவபுராணம் நாடகமும் நடைபெறும்.
தொடர்புக்கு: 98427 40957.
*************
சென்னை, விருகம்பாக்கம், நடேச நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன விநாயகர் பக்த ஜன சபா ஸ்ரீ சிவ விஷ்ணு ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ராமநாதேஸ்வரர் ஆலயத்தில் பிப்ரவரி- 13 அன்று, மஹா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெறும். மேலும் ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் பிப்ரவரி- 17,18 தேதிகளில் நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 98400 94246.
*************
செங்கல்பட்டிற்கு அடுத்துள்ள படாளம் கூட் ரோடிலிருந்து இடது பக்கமாக சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது நீலமங்கலம் கிராமம். இங்கு மஹாகாலேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மஹா சிவராத்திரி விழா, பிப்ரவரி 13 - அன்று மாலை 6.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை சிறப்பாக நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 98840 25911.
திருமுறை வழிபாடு
காஞ்சிபுரம் மேட்டுத்தெருவில் உள்ள அருள்மிகு நகரீஸ்வரர் கோயிலில் திருமுறை வழிபாடு பிப்ரவரி 18 - ஆம் தேதி, திருமுறை இன்னிசை, சொற்பொழிவுகளுடன் நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 98406 38813.
மஹா ருத்ராட்ச அர்ச்சனை
கீழ்புவனகிரி அருள்மிகு மீனாட்சி அம்பிகா சமேத அருள்மிகு சோமசுந்தரேஸ்வரர் ஆலயத்தில் 10,008 மஹா ருத்திராட்ச அர்ச்சனை நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 94434 39027.
நாள்: 18.2.2018, நேரம்: காலை 8.30 மணி.
திருக்குட நன்னீராட்டு பெருவிழா
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், பண்ணப்பட்டி கிராமம், மாரக்கவுண்டன் புதூரில் அமைந்துள்ள அருள்தரும் சுவர்ணாம்பிகை உடனமர் அருள்மிகு குபேரலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் இறைவனுக்கும் அன்னைக்கும் திருநெறிய திருமுறை தீந்தமிழ் ஓதி திருக்குட நன்நீராட்டு பெருவிழா நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 78680 24143/ 94432 95568.
நேரம்: காலை 7.15 - 9.00 மணி.
பாலாலய பூஜை
மிகவும் சிதிலமடைந்து திருப்பணி வேலைகளுக்கு எதிர் பார்த்திருக்கும் பாகவதபுரம் ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி கோயிலில் பாலாலய பூஜை பிப்ரவரி- 13, மாலை 5.00 மணிக்கும்; தொடர்ந்து பிப்ரவரி-14 ஆம் தேதி மதியம் 1.00 மணி வரையிலும் நடைபெறும். கும்பகோணத்திலிருந்து 10 கி. மீ. தொலைவில் திருவிசலூர் அடுத்து உள்ளது. 
தொடர்புக்கு : 98412 11249. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com