நிகழ்வுகள் 

திருநெல்வேலி மாவட்டம், சேரன் மகாதேவி வட்டம், குறுமுனிவர் அகத்தியர் தவமியற்றும் தென்பொதிகை மலையடிவாரத்தில் பாபவிநாசம் எனும் புண்ணிய தலம் உள்ளது.

திருப்பணி
திருநெல்வேலி மாவட்டம், சேரன் மகாதேவி வட்டம், குறுமுனிவர் அகத்தியர் தவமியற்றும் தென்பொதிகை மலையடிவாரத்தில் பாபவிநாசம் எனும் புண்ணிய தலம் உள்ளது. அருகில் கஜேந்திரன் என்னும் யானைக்கு மோட்சம் அளித்த ஸ்ரீ கஜேந்திர வரதப் பெருமாள் அருள்பாலிக்கும் அத்தாளநல்லூர் உள்ளது. இவ்வூருக்கு அருகில் சௌராஷ்டிர மகாஜனங்களால் பராமரித்து வழிபட்டப்படும் வீரவநல்லூர் அருள்மிகு ரங்கவல்லி ரங்கநாயகி சமேத ஸ்ரீ ரங்கநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. தற்போது இவ்வாலயத்தில் திருப்பணி வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆன்மிக அன்பர்கள் இத்திருப்பணியில் பங்குகொண்டு பெருமாளின் அருளைப் பெறலாம்.
தொடர்புக்கு: 85080 29217.
•••••••••••••••
வேலூர் மாவட்டம், ஆம்பூர் தாலுக்கா, பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 500 ஆண்டுகளுக்கு மேலான பழைமை வாய்ந்த சிவாலயம் மிகவும் சிதிலமடைது காணப்படுகிறது. லிங்கத்திருமேனி, அம்பாள், பைரவர் போன்ற அனைத்து தெய்வத் திருமேனிகளும் வெட்ட வெளியில் காணப்படுகின்றன. இக்கோயிலை புனரமைத்து புதுப்பிக்க பக்தர்கள் இத்திருக்கோயில் திருப்பணியில் பங்கு கொண்டு இறையருள் பெறலாம். 
தொடர்புக்கு: 90253 45747/ 90470 07554.
ஜெயந்தி விழா
தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை (ராமச்சந்திரபுரம்) ஸ்ரீ சங்கீத மஹாலில் ஸ்ரீமத் வேங்கடரமண பாகவத சுவாமிகளின் 237 ஆவது ஜெயந்தி விழா, மார்ச் மாதம், 9,10,11 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com