நிகழ்வுகள்

திருக்கயிலாய பரம்பரைத் தருமைஆதின அருளாட்சிக்கு உட்பட்ட ஆச்சாள்புரம் அருள்மிகு திருவெண்ணீற்றுமையம்மை உடனாகிய சிவலோகத் தியாகேசர் திருக்கோயிலில் தருமைஆதீனம் 26 -ஆவது குருமகாசந்நிதானம்

திருக்கல்யாணப் பெருவிழா
 திருக்கயிலாய பரம்பரைத் தருமைஆதின அருளாட்சிக்கு உட்பட்ட ஆச்சாள்புரம் அருள்மிகு திருவெண்ணீற்றுமையம்மை உடனாகிய சிவலோகத் தியாகேசர் திருக்கோயிலில் தருமைஆதீனம் 26 -ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் திருவுளப் பாங்கின் வண்ணம் மே-31 ஆம் தேதி ஞானசம்பந்தப் பெருமானின் திருக்கல்யாணப் பெருவிழா நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு அன்று காலை 9.00 மணி அளவில் ஸ்ரீபால
 சம்பந்தர் உபநயன நிகழ்ச்சியும், மாலை 5.00 மணிக்கு திருமுறைகள் திருவீதி உலா வருதலும், இரவு 9.00 மணிக்கு ஸ்ரீ திருஞானசம்பந்தர் மாப்பிள்ளை அழைப்பும் தொடர்ந்து திருக்கல்யாணமும், திருமணக் கோலத்துடன் வீதியுலாவும் மறுநாள் அதிகாலை 4.30 மணிக்குமேல் 5.30 மணிக்குள் மூலநட்சத்திரத்தில் பேரின்ப பேறளிக்கும் ஜோதியில் புகும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.
 திருஅருட்பா இசைவிழா
 கடலூர் மாவட்டம், வடலூர், வள்ளலார் பெருவெளித்திடலில் திருஅருட்பா இசைச் சங்கத்தின் 33 -ஆவது ஆண்டு இசைவிழா, மே 25, 26, 27 - ஆம் தேதிகளில் சத்திய தருமச்சாலையின் 152 -ஆம் ஆண்டு தொடக்க நாளில் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 94432 62269.
 குருபூஜை
 சென்னை, தியாகராய நகர், வடக்கு உஸ்மான் சாலை, வேளூர் தேவஸ்தான இறைபணி மண்டபம், தருமபுரம் ஆதீன மடாலய தேவாலய பிரசார நிலையத்தில் திருஞானசம்பந்த சுவாமிகள் குருபூஜை விழா 31.05.2018 - அன்று நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 044 2814 2642.
••••••••••••••
 விழுப்புரம் மாவட்டம், பொம்மயபாளையம், ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடத்தில் 2 -ஆம் பட்டம் ஸ்ரீமத் ஆதி சிவஞான பாலய சுவாமிகள் மகாகுருபூஜை விழா, 28.05.2018 - அன்று நடைபெறுகின்றது.
 காவடி உற்சவம்
 தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை , அம்மன் கோயில் தெரு, அருள்மிகு சக்திவேல் முருகன் ஆலயத்தின் 49- ஆவது ஆண்டு வைகாசி விசாக பெருவிழா காவடி உற்சவம் ,
 28.05.2018 - காலை 9.00 மணியளவில் சுவாமி வீதியுலாவும்; மாலை 4.00 மணிக்கு பால்குடம், பால்காவடி, அலகு காவடி, அபிஷேகம் ஆராதனைகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 99447 41774.
 திருப்பணி
 திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா, திருவாஞ்சியம் மேல வீதியில் அமைந்துள்ள அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் கிராமவாசிகள், திருப்பணிகுழு சார்பில் திருப்பணி நடைபெறுகின்றது. பக்தர்கள் இவ்வாலய திருப்பணியில் பங்குகொண்டு அன்னையின் அருளைப் பெறலாம்.
 தொடர்புக்கு: 99653 64766.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com