* "பிரசாதமும் கடவுளும் வேறல்ல' என்ற உறுதியான நம்பிக்கையை, நீ உன் மனதில் எப்போதும் பதிய வைத்துக்கொள்.
* அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து ஜபம் செய்தால், எப்படி மனதில் நிம்மதியில்லாமல் போகும்?
* எப்போதும் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசங்களை நினைவில் வைத்திருந்தால், மனம் தானாக அமைதியடையும்.
* ஸ்ரீ ராமகிருஷ்ணர் எப்போது ஒரு பக்தனைப் பிடித்துவிட்டாரோ, அதன்பிறகு அவனுக்கு வீழ்ச்சியே இல்லை.
* தினமும் பத்தாயிரம் முறை அல்லது, இருபதாயிரம் முறை ஜபம் செய்ய வேண்டும்.
* கடவுள் நமக்கு விரல்களைக் கொடுத்திருப்பதற்குக் காரணம், மந்திர ஜபம் செய்யும் பேற்றை அவையும் பெற வேண்டும் என்பதுதான்.
* பிரசாதமாக இருந்தால் ஐந்து வேளை சாப்பிட்டாலும் தவறில்லை; பிரசாதத்தைச் சாதாரண சாதத்துடன் ஒப்பிடக் கூடாது.
* எவ்வளவு துன்பம் இருந்தாலும், இறைவன் நாமத்தை ஜபம் செய்வது பயத்தை விலக்கிவிடும்.
* பொறுமை மிகவும் உயர்ந்த குணம். அதைவிட மேலான குணம் எதுவும் இல்லை.
* இறைவனைச் சரணடையுங்கள். "என்னைப் பாதுகாப்பதற்கு இறைவன் ஒருவர் இருக்கிறார்' என்ற எண்ணம் மனதில் இருந்தால் போதும். * ஒரு சாதாரணப் பொருள் வீணாவதையும் நாம் அனுமதிக்கக் கூடாது.
* கடவுள் தரும் கஷ்டங்களையும் துன்பங்களையும் முணுமுணுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரது திருவுளம் போலவே எல்லாம் நடக்கும்.
* "இறைவன் எனக்குச் சொந்தமானவர்' என்ற உண்மையான நம்பிக்கை உனக்கு இருக்க வேண்டும்.
* மற்றவர்களுக்குத் தானம் செய்யும்போது, அந்த தானத்தின் பலனையும் அதனுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
- அன்னை ஸ்ரீ சாரதாதேவியார்