சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சீனாவில் வியாழக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

சீனாவில் வியாழக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிரதேசம் ஹுட்டுபி மாவட்டத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 1.15 மணிக்கு (உள்ளூர் நேரம்) சக்தி வாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமிக்கடியில் 6 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2 அலகுகளாகப் பதிவானது.
நிலநடுக்கத்தால் சன்ஜி நகரில் உள்ள பல கட்டடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை என அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com