பிலிப்பின்ஸ்: பேருந்து விபத்தில் 26 பேர் சாவு

பிலிப்பின்ஸில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்தனர்.

பிலிப்பின்ஸில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
நுவே எஸிஜா மாகாணம் கேரங்ளன் நகரில் 45 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து எதிர்பாராதவிதமாக ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 26 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சிய பயணிகள் அனைவரையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மலைப் பகுதி சாலையில் பேருந்து வேகமாக வந்தபோது, பிரேக் செயலிழந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com