சிரியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ரக்கா நகரில், அமெரிக்கக் கூட்டுப் படையினர் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 29 பொதுமக்கள் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.
உயிரிழந்தவர்களின் 14 பேர் சிறுவர்கள் எனவும், தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்தது.