எகிப்தில் இரு ரயில்கள் மோதிக் கொண்டதில் 44 பேர் உயிரிழந்தனர்.
அலெக்ஸாண்ட்ரியா நகர் அருகே இந்த விபத்து வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்தது. அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து தலைநகர் கெய்ரோவை நோக்கி பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே பாதையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு ரயிலின் பின் பாகத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த சிலர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதுவரை 44 பேர் பலியாகியுள்ளனர். விபத்தில் நசுங்கிய ரயில் பெட்டி இடிபாடுகளில் மேலும் சில பயணிகளின் உடல்கள் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மீட்புப் பணிகள் நிறைவடைந்த பிறகுதான் பலியானோர் எண்ணிக்கை சரியாகத் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் காயமடைந்த 180 பேர் அலெக்ஸாண்ட்ரியா நகரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.