நேபாளத்தில் கன மழை: 49 பேர் பலி

நேபாளத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 49-ஆக அதிகரித்தது.
நேபளாத்தின் ஜனக்புர் விமான நிலையத்தில் விமானத்திலிருந்து  இறங்கி வெள்ளத்தில் நடந்து செல்லும் பயணிகள்.
நேபளாத்தின் ஜனக்புர் விமான நிலையத்தில் விமானத்திலிருந்து இறங்கி வெள்ளத்தில் நடந்து செல்லும் பயணிகள்.

நேபாளத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 49-ஆக அதிகரித்தது.

நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. நேபாளத்தின் 21 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சமவெளிப் பகுதியான தெராயில் பெரும்பாலான நிலப் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. பஞ்சதர், சிந்தூலி, ஜாப்பா, மொராங் ஆகிய மாவட்டங்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டன. வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 49-ஆக அதிகரித்தது. 35,843 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. சுமார் ஆயிரம் வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com