காஸாவுடனான எல்லையையொட்டி, பூமிக்குஅடியில் 60 கி.மீ. நீள சுரங்க அரண் சுவற்றை அமைக்கும் பணியை இஸ்ரேல் தொடங்கியுள்ளது .
சுரங்கப் பாதை வழியாக எல்லை தாண்டி ஊடுருவ முயல்பவர்களைக் கண்டறிய உதவும் சாதனங்கள் உள்ளிட்ட அதிநவீன கருவிகள் இந்த அரணில் பொருத்தப்பட்டிருக்கும்.
3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற காஸா போரின்போது, சுரங்கப் பாதை வழியாக ஹமாஸ் பயங்கரவாதிகள் பலமுறை இஸ்ரேலுக்குள் ஊடுவி, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினர். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கும் விதமாகவே இந்த சுரங்க அரண் அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.