பிலிப்பின்ஸில் போதை மருந்து கடத்தல் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கையில், செவ்வாய்க்கிழமை மட்டும் 32 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
அந்த நாட்டின் அதிபராக ரோட்ரிகோ டுடேர்தே பதவியேற்றதிலிருந்து இதுவரை 3,200 போதை மருந்து வியாபாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், போலீஸார் நடவடிக்கையில் ஒரே நாளில் 32 பேர் கொல்லப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.