தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக தபால் தலை வெளியிட இந்தியா, கனடா அரசாங்கம் முடிவு செய்தது.
இதனையடுத்து, இரு நாடுகளின் தபால் துறைகளும் இவ்விவகாரம் தொடர்பாக கூட்டாக உடன்படிக்கை மேற்கொண்டது.
இந்நிலையில், செப்டம்பர் 21-ந் தேதி இந்திய பண்டிகையான தீபாவளியை குறிக்கும் விதமாக இந்தியா, கனடா நாடுகள் இந்த தபால் தலையை கூட்டாக வெளியிடுகிறது.
கனடாவில் வாழும் இந்தியர்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்தியா - கனடா நாடுகளுக்கு இடையிலான கலாசாரத்தின் சின்னமாகவும் தீபாவளி பண்டிகை குறிக்கப்படுகிறது.