ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம்

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க அமெரிக்கா எடுத்துள்ள முடிவு குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க அமெரிக்கா எடுத்துள்ள முடிவு குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் சர்ச்சைக்குரிய அறிவிப்புக்கு அரபு நாடுகளில் மட்டுமல்லாமல், மேற்கத்திய நாடுகளிடையேயும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள 8 நாடுகள் ஜெருசலேம் விவகாரம் குறித்து விவாதிக்க அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களான பிரிட்டன், பிரான்ஸ் அவசரக் கூட்டம் நடத்தக் கோரியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
டிரம்ப்பின் முடிவுக்கு பிரிட்டன், சவூதி அரேபியா போன்ற அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.
இதனிடையே, ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெருசலேம் பிரச்னை என்பது இரு தரப்பு விவகாரம் என்றும் இஸ்ரேல், பாலஸ்தீன் நேரடியாகப் பேசித் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், "பாலஸ்தீனம் - இஸ்ரேல் என்ற இரு நாடுகள் அமைவதுதான் தீர்வு, அதற்கு மாற்றாக எதையும் சிந்திக்க முடியாது' என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக ஐ.நா. பொதுக்குழுவில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com