"இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்: தற்போதைய உண்மை நிலவர அடிப்படையில் அமெரிக்கா எடுத்த முடிவு'

ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் முடிவு, தற்போதைய உண்மையான நிலவரப்படி எடுத்த முடிவு என்று அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.
"இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்: தற்போதைய உண்மை நிலவர அடிப்படையில் அமெரிக்கா எடுத்த முடிவு'

ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் முடிவு, தற்போதைய உண்மையான நிலவரப்படி எடுத்த முடிவு என்று அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.
வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறியது:
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிக்கிறது. இதனை அதிகாரபூர்வமாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். அந்தப் பகுதியில் நீடித்த அமைதிக்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு வேண்டும் என்பதில் அமெரிக்காவுக்கு எந்த தயக்கமோ ஐயமோ இல்லை. இறுதி லட்சியம் என்பது இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே அமைதி உடன்படிக்கை ஏற்பட வேண்டும் என்பதுதான். அதற்கான முயற்சிகளுக்கு அமெரிக்கா துணை நிற்கும்.
ஜெருசலேம் குறித்து அமெரிக்காவைப் பின்பற்றி வேறு ஏதேனும் நாடு இதுபோன்ற அறிக்கையை வெளியிடுமா என்பது சந்தேகம்தான்.
ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கும் அதே நேரத்தில், அந்த நகருக்கு உரிமை கொண்டாடும் இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்கா தடையாக இருக்காது. எல்லைக்கோடுகள், இறையாண்மை குறித்து அந்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதில் அமெரிக்கா தலையிடாது என்று அதிபர் டிரம்ப் தெளிவாகக் கூறியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத் தீர்மானத்தின்படியும், ஜெருசலேமில் தற்போதைய உண்மை நிலவரத்தின் அடிப்படையிலும் அந்த நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அதிபர் அறிவித்திருக்கிறார் என்று சாரா சாண்டர்ஸ் கூறினார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவுத் துறை விவகார அவைக்குழுத் தலைவர் எட் ராய்ஸ் இது தொடர்பாகத் தெரிவித்திருப்பது:
ஒவ்வொரு நாட்டுக்கும் தங்கள் அரசின் தலைமையகம் எந்த இடத்தில் அமைய வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை உண்டு. இஸ்ரேல் மட்டும் ஏன் அதற்கு விதிவிலக்காக இருக்க வேண்டும்? அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றும்போது மிகுந்த எச்சரிக்கை காட்ட வேண்டும். பதற்றம் நிறைந்த பிரதேசத்தில் அமெரிக்க தேச நலன், அமெரிக்கர்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும் என்றார்.
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அதிபர் டிரம்ப் கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்புக்கு அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் உள்ள யூத அமைப்புகள் வரவேற்பு தெரிவித்திருக்கின்றன.
நியூயார்க் டெய்லி நியூஸ் தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பது: 
ஜெருசலேம் என்பது எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாத நகரம் என்றும் பல நாடுகள் சொந்தம் கொண்டாடும் புராணத் தலம் என்றும் கடந்த எழுபது ஆண்டுகளாக அமெரிக்காவில் ஒரு கட்டுக் கதை நிலவி வந்தது. 
டிரம்ப்பின் அறிவிப்பு அந்த நிலையை மாற்றிவிட்டது. இஸ்ரேலுக்கு எதிரான நாடுகள் ஜெருசலேம் குறித்த உண்மையை ஏற்க வேண்டும். 
யூதர்களுக்கு நாடு உண்டு என்பதை அனைவரும் ஏற்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com