இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா தீவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.5 ஆக பதிவானது. 20 வினாடிகள் உணரப்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டுவெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும் இதில் 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜாவா சுமத்ரா தீவுக்கு மேற்கே கடலுக்கடியில் சுமார் 91 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.