சிரியாவில் கார் குண்டுவெடிப்பு: 42 பேர் பலி!

சிரியாவில் வடக்குப் பகுதி கிராமம் ஒன்றில் இன்று நடந்த கார் குண்டுவெடிப்பில் 42 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவில் கார் குண்டுவெடிப்பு: 42 பேர் பலி!

டமாஸ்கஸ்: சிரியாவில் வடக்குப் பகுதி கிராமம் ஒன்றில் இன்று நடந்த கார் குண்டுவெடிப்பில் 42 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரிய நகரமான அல்-பாப்பின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் சூசியன். அங்கு பாதுகாப்பு சோதனைச் சாவடி ஒன்றின் மீது இன்று வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று மோதி வெடித்து சிதறியது. இதில் 42 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். .

இந்த பாதுகாப்பு சோதனைச் சாவடியானது ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு  எதிராக 'சுதந்தர சிரிய ராணுவம்' என்ற பெயரில் போராடி வரும் படைக்குழுவினரால் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகும்.

காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்  கூடுமென்று சிரியாவிலிருந்து செயல்படும் மனித உரிமைஅமைப்பு ஒன்று தெரிவிக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com