நாட்டு மக்களுக்கு ஒபாமா நன்றிக் கடிதம்!

எட்டு ஆண்டுகளாக அமெரிக்க அதிபராகப் பணியாற்றிய காலத்தில் மன உறுதியும் நம்பிக்கையும் அளித்து வந்தது அமெரிக்க மக்கள்தான் என்று ஒபாமா வெளியிட்டுள்ள நன்றிக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களுக்கு ஒபாமா நன்றிக் கடிதம்!

எட்டு ஆண்டுகளாக அமெரிக்க அதிபராகப் பணியாற்றிய காலத்தில் மன உறுதியும் நம்பிக்கையும் அளித்து வந்தது அமெரிக்க மக்கள்தான் என்று ஒபாமா வெளியிட்டுள்ள நன்றிக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
அமெரிக்காவின் 44-ஆவது அதிபராகப் பதவி வகிக்க எனக்கு வாய்ப்பளித்ததற்கு இந்நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி ஒரு புதிய அதிபர் பதவியேற்கிறார்.
கட்சி பேதமில்லாமல், அமெரிக்கர்கள் அனைவரும் நாட்டின் சிறந்த குடிமகன்களாக இருக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். தேர்தல் காலத்தில் மட்டும் நாட்டைப் பற்றிச் சிந்திக்காமல், நமது வாழ் நாள் முழுவதும் சிறந்த குடிமக்களாக நாம் திகழ வேண்டும். எட்டு ஆண்டுகளாக நான் இந்த நாட்டின் அதிபராகப் பதவி வகித்த காலத்தில் எனக்கு மன உறுதியையும் நம்பிக்கையையும் அளித்து வந்தது அமெரிக்க மக்களாகிய நீங்கள்தான்.
அமெரிக்கா என்பது ஒரு தனி நபருக்கு மட்டும் சொந்தமான அரசியல் களம் அல்ல. நமது ஜனநாயகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த சொல் "நாம்' என்பதுதான். "மக்களாகிய நாம்', "எந்த இன்னலையும் நாம் கடந்து வருவோம்', "நம்மால் முடியும்' என்ற வாக்கியங்கள் நமது மன உறுதியை வெளிப்படுத்துபவை. இதை நான் அழுத்திச் சொல்ல விரும்புகிறேன். நான் பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும், அமெரிக்காவின் முன்னேற்றத்துக்காக மக்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நானும் உடனிருப்பேன்.
என்னை சிறந்த மனிதனாகவும் சிறந்த அதிபராகவும் ஆக்கிய அமெரிக்க மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஒபாமா அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com