ஈராக்  வெளியுறவுத்துறை அமைச்சர் நாளை இந்தியா வருகை 

ஈராக் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் இப்ராஹிம் அல்-ஜாஃப்ரி  5 நாள் அரசுமுறைப் பயணமாக நாளை இந்தியா வருகிறார்.
ஈராக்  வெளியுறவுத்துறை அமைச்சர் நாளை இந்தியா வருகை 

புதுதில்லி: ஈராக் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் இப்ராஹிம் அல்-ஜாஃப்ரி 5 நாள் அரசுமுறைப் பயணமாக நாளை இந்தியா வருகிறார்.

தில்லியில் நாளை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்,  ஆகியோரை சந்தித்துப் பேசும் அவர்  டாக்டர் இப்ராஹிம், இந்த பயணத்தின்போது மும்பை நகருக்கு செல்கிறார்.

2016-17 ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம்  13 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு நடந்துள்ளது. மேலும் இருதரப்பு உறவுகள் மேம்படவும் இந்தியா-ஈராக் இடையே புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com