ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது பயங்கரவாதிகள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்திய தூதரகம் வளகாத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் பயங்கரவாதிகள் இன்று திடீரென ராக்கெட் வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.