லண்டன் அடுக்குமாடி கட்டடம் தீ விபத்து: 50 பேர் காயம்

லண்டன் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 50 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

லண்டன் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 50 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மேற்குப் பகுதியில் உள்ள 27 மாடிகள் கொண்ட கட்டடத்தில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 2-வது தளத்தில் பிடித்த தீ மளமளவென்று அனைத்து தளங்களுக்கும் பரவியது. தீயை அணைக்க 40 வாகனங்களில் சென்ற 200 தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரமாக போராடி வருகின்றனர். 

தீவிபத்திற்கு தற்போது வரை காரணம் தெரியவில்லை. இதனிடையே தீ விபத்தில் சிக்கி இதுவரை 50 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்திற்குள்ளான கட்டடத்தில் 120 குடும்பங்கள் வரை வசித்து வந்திப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com